புதன், 23 ஜூன், 2010

கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாள் ஜூன் 24

”என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடெலென்று நீ கேட்கிறாய்
நான் உன் பேரை தினம் பாடும் குயில்லல்வா
என் பாடல் நீ தந்த மொழியல்லவா..”

கல்லூரிக் காலங்களில் கவியரங்களில் கலந்து கொள்ளும் போது நான் குரு நாதராக வணங்கும் கவியரசை வணங்கி ஆரம்பிக்க அவருடைய வரிகளையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன்..இன்றும் நண்பர்கள் வட்டத்தில் என்னை கவியரசின் பெயரை தினம் பாடும் குயிலாகத்தான் பார்ப்பார்கள்.

4வது படிக்கும் போது கேட்ட பாடல்...”போனால் போகட்டும் போடா” .என் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு பாட்டின் அர்த்தம் தெரிந்து கேட்ட பாடல்..எழுதியது கண்ணதாசன். அப்பாவிடம் அது பற்றி பேசியதற்கு அப்பா சொன்னது.”கண்ணதாசன் எவ்வளவோ எழுதி இருக்கிறார்.“ என்று சொல்லி
“பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் –அவனைப்
புரிந்து கொண்டால் அவன் பெயர் இறைவன்”

என இன்னுமொரு பாடலை அறிமுகப்படுத்த..கண்ணதாசனோடு எனக்கு மிகச்சிறிய வயதிலே பரிச்சியம் ஏற்பட்டுவிட்டது .அந்தக் காலத்தில் தமிழ் திரை உலகின் முடிசூடா மன்ன்ன் கவியரசர் தான்.. அவருடைய பாடல்கள் தான்.எங்கு திரும்பினாலும்..

பருவ வயதில் கண்ணதாசனுடைய பாடல்களுக்கு ஒரு தனி அர்த்தம் கிடைக்கும்.

“ நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்”

“உலகமெங்கும் ஒரே மொழி..உள்ளம் பேசும் காதல் மொழி..”

உந்தன் கண்ணிலும் முகத்திலும் மோதி வரும் இளங்காற்றீன் விலையே கோடி பெரும்’

”இன்பம் என்பது இருவரின் உரிமை.யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை”

” இளமை கொலுவிருக்கும்,இனிமை சுவை இருக்கும் இயற்கை மனமிருக்கும் பருவத்திலே..பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே”

“ காலங்களில் அவள் வசந்தம்”

“பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஒருயிரே”

“ யார் என்ன சொன்னாலும் செல்லாது அணை போட்டு தடுத்தாளும் நில்லாது”

கண்ணதாசனுடைய பாடல்கள் தமிழகத்தில் ஒலிக்காத நேரமில்லை.. ஒரு தமிழனின் வாழ்வில் , குழந்தை பிறப்பு முதல் இறுதி யாத்திரை வரை அவருடயை பாடல்கள் தொடர்ந்து வரும்.எல்லா காலங்களுக்கும் எல்லா நேரங்களுக்கும் அவருடைய பாடல்கள் மிகப் பொருத்தமாக வரும்.. தமிழனுடைய வாழ்வில் வாழ்வியல் முறையில் ஒன்றிணைந்து இருந்த ஒரு கவியுள்ளத்திற்கு மட்டுமே இந்தச் சாதனை சாத்தியமாருக்க முடியும்..

கண்ணதாசனைப் பற்றி அறிந்தவர்களில் பல பேருக்கு கூட அவருடைய திரை இசைப் பாடல்கள் பற்றிய அறிமுகம் மட்டுமே உண்டு.. அவருடைய தனிக்கவிதைகள் 7 தொகுதிகளாக வந்துள்ளன..

அதில் ஒன்று..

பிறப்பின் வருவது யாதெனெக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்.......
இறப்பின் வருவது யாதெனக் கேட்டென் இறந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனெக் கேட்டென் மண்ந்து பாரென இறைவன் பணித்தான்....
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்...

இப்படி ஒன்று ஒன்றாகச் சொல்லிவரும் கவிஞர் கடைசி வரிகளில் தான் கவியரசர் என்று சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறார்..

அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டென்
ஆண்டவன் சற்று அருகில் நெருங்கி அனுபவம் என்பதே நான் தான் என்றான்”


மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் தனது வலைத்தளத்தில் கண்ணதாசனைப் பற்றி தொடர் கட்டுரை எழுதி வருகிறார்கள். இதைப் படிக்கும் இன்றைய இளைஞர்கள் கண்ணதாசனின் பன்முகத்தன்மை பற்றி அறிந்து கொள்ள அவசியம் அவர் தளத்திற்கு சென்று படிக்கவும் http://marabinmaindanmuthiah.bolgspot.com

என்னுடைய பள்ளி நோட்டுப்புத்தகங்களில் பின்வரும் வரிகளை எழுதி வைத்து இருப்பேன்.

”உள்ளதைச் சொல்வேன்..சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது..”

இது கல்லூரிக்காலங்களிலும் தொடர்ந்தது..இப்ப அப்படி எங்கும் எழுதி வைக்கவில்லை.. ஆனால் வாழ்க்கையையே அப்படித்தான் அமைத்துக் கொண்டு வாழந்து வருகிறேன் என்று நினைக்கிறேன்..கண்ணதாசன் மாதிரியே..

இன்று கண்ணதாசனின் பிறந்த நாள்.. அவர் நினைவாக இந்த இடுகை.

அவர் பற்றிச் சொல்வதற்கு ரொம்ப உண்டு.பின்னாளில் எழுதுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது..


அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

3 கருத்துகள்:

http://rkguru.blogspot.com/ சொன்னது…

அருமையான பதிவு வாழ்த்துகள்..!

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_23.html

Thameez சொன்னது…

ஒரு உண்மையான ரசிகனால் இந்த அளவுக்கு 'அஞ்சலி' செலுத்த முடியும். நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்! வாழ்க கவியரசர். வளர்க அவர் புகழ்.

Thenammai Lakshmanan சொன்னது…

மிக அருமையான பகிர்வு.. நன்றி வெற்றி வேல் சார்

கருத்துரையிடுக