வெள்ளி, 4 ஜூன், 2010

தலைமகன் கலைஞருக்கு ஒரு தொண்டனின் வாழ்த்து

ஆச்சர்யமாக இருக்கிறது..

பள்ளிப்படிப்பை பாதியில் முடித்த ஒருவருக்கு, எப்படி அனைத்து ஆற்றல்களும் சேர்ந்தன என..

எம் தாய் மொழியான தமிழுக்கு இப்படி ஒரு வீரியம் உள்ளது என்பதை அறிந்து கொண்டோம்.. 27 வயதில் நீங்கள் எழுதிய பராசக்தி திரைப்பட வசனங்களை கேட்ட பொழுது...

1971-ல் பொதுத் தேர்தலின் போது தங்களை சிவகஙகை சண்முகராசா கலையரங்கில் பார்த்த்தில் இருந்து தொடர்கிறது இந்த ஆச்சர்யம்..

1972-ல் எம்.ஜி.ஆரை வெளியேற்றிய போது., தி.மு.க..அழிந்துவிட்ட்து என்று நானும் தான் அந்த அறியாத வயதில் நினைத்தேன்..ஆனால் எதற்கும் கலங்கா ஆலமரமாக நீங்கள் மட்டுமே..

1975-ல் தி.மு.க அரசு முதன்முதலாக கலைக்கப்பட்ட பொழுதும், அதைத் தொடர்ந்து, இரண்டாவது விடுதலைக்கான போராட்ட்த்தின் தளகர்த்தராக நீஙகள் ஆற்றிய பணிகளை கண்ட பொழுதும்..

அவசரகால நெருக்கடிகளின் போது, பத்திரிக்கைகள் கடும் தணிக்கைக்கு உள்ளான பொழுது..தன்னந்தனியாக அண்ணா சாலையில், முரசொலி விற்ற செய்தி கேள்விப்பட்ட பொழுது..

அதே காலகட்டத்தில், அனைத்து தோழர்களும் சிறைச்சாலையில் இருந்த பொழுது, தமிழகமெங்கும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, திராவிட இயக்கச் சுடரை அணையாமல் காத்த்தை நினைத்து..

பதவிகளுக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு ஒவ்வொருவராக வெளியேறியபோதும்.. கலங்காமல் 13 வருடங்கள் கழகத்தை கட்டி காத்த அந்த தலைமைப் பண்பை நினைத்து

பதவியில் இருக்கும் போதெல்லாம்..பிறந்த நாள் தோறும்..

கண்ணொளி வழங்கும் திட்டம்..
கை ரிக்‌ஷா ஒழித்து சைக்கிள் ரிக்‌ஷா வழங்கியது
பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம்..
அன்று தொடங்கி,
இன்று
தான் முதன்முதலாக 1955-ல் சென்னையில் வாங்கி, இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கும் தனது இல்லத்தை, மருத்துவமனையாக மாற்றி எழுதியது வரை..

இன்று தமிழகம் மிக வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருப்பதற்கு முக்கிய காரணம் நீஙகள் அல்லவா..

5-ம் முறையாக நீங்கள் முதல்வராக பதவியேற்று, இதுவரை நீங்கள் செய்த சாதனைகளை , நீஙகளே முறியடித்து,
1ரூ-க்கு ஒரு கிலோ அரிசி..
108- அவசர அழைப்பு திட்டம்
கலைஞர் காப்பீடு திட்டம்..
100 கோடி மதிப்பில் அறிவுக்கிடங்காக மாறப்போகும் ஆசியாவிலே பெரிய நூலகம்..

இதுமட்டுமல்ல..

வரப்போகும் ஆண்டுகளில், குடிசையே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறப் போவதை நினைத்து..ஆச்சர்யம் தொடர்கிறது..


இன்று புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் மேலாண்மை வகுப்புகளில் சொல்லிக் கொடுக்கும் அனைத்து தத்துவங்களையும் .. பள்ளிக்குப் போகாமலே எப்படி கற்றீர்கள் என்ற ஆச்சர்யம்..

இந்தியா முழுதும் சுற்றி வந்தாலும், முதல்வர் பதவியில் இருந்து கொண்டு, கட்சித்தொண்டர்களுடன் தொடர்ந்து உறவாடிக்கொண்டே., ஆட்சி நிர்வாகத்தை திறம்பட நட்த்திக் கொண்டே..தினசரி படிப்பதும்.. எழுதுவமாக இருக்கும் ஒரு முதல்வரை காணக்கிடைப்பது ஆச்சர்யம்..

மாற்றுத்திறனாளிகளாக இருக்கட்டும், திருநங்கைகளாகட்டும் ., உடனடியாக சந்திக்க்க்கூடிய அளவில், மிக எளிமையான முதல்வராக இருப்பதை அறிந்து ஆச்சர்யம்..

தமிழக வரலாற்றில் அனைத்து திறனும் அமையப்பெற்ற உங்களைப் போன்ற ஆளுமை..
மொத்தத்தில நீங்கள் தமிழகத்திற்கு ஒரு பெருமிதம்..

வாழ்த்துக்கள்..

தாங்கள் அகவை 100 க்கும் மேல் காண விருப்பம் கொண்ட ஒரு

அன்பு உடன்பிறப்பு..
அ.வெற்றிவேல்.

வலைத்தலம் : http://avetrivel.blogspot.com
மின்னஞ்சல் : vetrisasi@yahoo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக