உமாசங்கர்..நியாயமான ஒரு அதிகாரி.. அவருக்கு கொடுத்த அனைத்து வேலைகளும் திறம்பட செய்த ஒரு அதிகாரி என்பதை இன்றைய கலைஞர் அரசே அவரை அங்கீகரித்து பல்வேறு பொறுப்புகளை கொடுத்ததில் இருந்து அறிந்து கொள்ளலாம்..
இன்று அவரை இடைநீக்கம் செய்தது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.. அதுவும் எந்த ஊழல் புகாரும் இன்றி. 18 வருடங்களாக தெரிந்திராத விஷயத்தை இன்று தான் கண்டுபிடித்ததாக ஒரு கதை..ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா சிக்கிய பொது ஒரு தலித் என்ற கேடயத்தை இதே முதல்வர் பயன்படுத்தியது அனைவருக்கும் தெரியும்..
இன்று நாங்கள் கேட்கிறோம்..தலித் என்பதாலா? அல்ல தன் குடும்ப விஷயங்களில் தலையிட்டதாலா?
தி.மு.க அரசின் இந்த மக்கள் விரோத செயலுக்கு எனது கண்டனத்தி இங்கு பதிவு செய்கிறேன்.
( இணையத்தின் மூலமாக , வலைப்பதிவர்கள் மூலமாக கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ள அய்யா தருமி, நண்பர் வால்பையனுக்கும் நன்றிகள்)
அன்புடன்
அ.வெற்றிவேல் தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com