ஞாயிறு, 13 ஜூன், 2010

உலக விளையாட்டுத் திருவிழா....கால்பந்தைக் கவனியுங்கள்

அமர்க்களமாக ஆரம்பமாகி உள்ளது உலக கோப்பைக்கான கால்பந்து போட்டிகள்..

இங்கிலாந்தின் காலணி நாடுகள் என்ற முறையில் அடிமைகளாக இருந்த இந்தியா, பாகிஸ்தான் , இலங்கை போன்ற நாடுகள் தவிர்த்து உலகமெங்கும் அனைத்து விளையாட்டு ரசிகர்களாலும் தலைசிறந்த விளையாட்டாக கால்பந்து மட்டுமே இன்றும் பார்க்க, ரசிக்கப்படுகிறது..

உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழா என்றால் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை மட்டுமே சொல்லலாம்..

கால்பந்து வரலாற்றில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் நடப்பது இதுவே முதல் முறை..32 நாடுகள் தகுதி பெற்று இத் திருவிழாவிற்கு தேர்வாகி உள்ளார்கள்.

யார் இறுதி சுற்றுக்குச் செல்வார்கள் என்று உலகெங்கும் ரசிகர்கள் பந்த்யம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்... ஸ்பெயின், இங்கிலாந்து, பிரேஸில், நெதர்லாந்து போன்ற நாடுகள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ளதாக கால்பந்து வல்லுநர்கள் கூறுகிறார்கள்..போகப் போகத் தெரியும்..

மேலே சொன்ன அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த செயதிகள் தான்..
நான் சொல்லப்போவது இதுவல்ல...


விளையாட்டு வகைகளில் சேர்க்க கொஞ்சமும் தகுதி இல்லாத, தமிழ் திரைப்பட வரிசைகளில், ஒரு action thriller என்ற வகைகளில் மட்டுமே சேர்த்துக் கொள்ள தகுதி பெற்ற கிரிக்கெட் என்ற பொழுது போக்கு ஆட்டத்தை ஒரு மாத காலம் தள்ளி வைத்து, தமிழ் ரசிகர்கள் கால்பந்தைக் கவனிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்..


விநாடிக்கு விநாடி இடம் மாறும் அந்த கால்பந்தை கவனியுங்கள்.. வீரர்களின் கால்கள் செய்யும் அந்த மந்திர வித்தையை அனுபவித்து பாருங்கள்.. நரம்புகள் தெறிக்க உடலெஙகும் கொட்டும் வியர்வைக்கும், ஒவ்வொரு விநாடிக்கும் மதிப்பளிக்கும் ஒரு விளையாட்டு கால்பந்து என்று உங்களுக்கே தெரிய வரும்.... குழு மனப்பான்மையுடன் விளையாடும் அந்த வீரர்களின் அந்த ஒத்திசைவை உற்று நோக்குங்கள்..பந்து கோல் கம்பைத் தொடப்போகும் ஒவ்வொரு நிமிடமும் இதயத்துடிப்பு அதிகரிக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம் தர முடியும்..

கால்பந்து விளையாட்டை பாருங்கள்..விளையாட்டு என்பதற்கு உண்மையான அர்த்தம் உங்களுக்கே தெரியவரும்..

அனுபவியுங்கள்..அர்த்தமுடன் உங்கள் மணித்துளிகளை செலவிடுங்கள் என்ற அன்பான வேண்டுகோளுடன்..
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ks.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக